Imran Khan: இம்ரான் கானுக்கு என்ன ஆச்சு.. உயிரிழந்ததாக பரவும் தகவல்.. சகோதரி பகீர் வார்னிங்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் சூழலில், அவரின் சகோதரரி அலீமா ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இம்ரான் கானின் தலை முடியை கூட தொடுவதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் சிறையில் வைத்து கொலை செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி தொடர்ந்து பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இதன் காரணமாக Where is Imran Khan என்ற ஹேஷ்டாக் சோசியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் அடியாலா சிறைத்துறை நிர்வாகம் இம்ரான் கான் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் வேறு சிறைக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கானை தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று சகோதரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு இம்ரான் கான் சகோதரி அலீமா அளித்துள்ள பேட்டியில், கடந்த 6 முதல் 7 மாதங்களாக ஏராளமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். சில நேரம் இம்ரான் கானை சந்திக்க அனுமதிப்பார்கள். சில நேரம் எங்களில் ஒருவரை மட்டுமே அனுமதிப்பார்கள்.
சில நேரம் சிறையில் அதிக நேரம் காத்திருக்க வைப்பார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்ரான் கானை எங்களால் சந்திக்க முடிந்தது. அதற்கு இம்ரான் கான் ஒரு வழக்கை எதிர்கொண்டிருந்ததெ காரணமாகும். குடும்பத்தினர், ஊடகங்களுக்கு அனுமதியின்றி வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்றால், மீண்டும் இந்த வழக்கில் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதியின் உத்தரவால், வழக்கை தொடர முடிவு செய்தோம். இப்படிதான் இம்ரான் கானை சந்திக்க முடிந்தது. இந்த வழக்குகள் ஏற்கனவே நிரபராதி என்று இம்ரான் கான் நிரூபித்தவைதான். 5,6 வாரங்களுக்கு முன்பாகவே விசாரணை முடிவடைந்துவிட்டது. நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறினார்கள். ஆனால் திடீரென டிசம்பர் 28ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இம்ரான் கானுக்கு எதிரான சதி நடப்பதாக நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இம்ரான் கானின் சகோதரி, இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வரை எங்களால் எதையும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இம்ரான் கானின் தலைமுடியை கூட யாராலும் தொட முடியாது. அப்படி தொட்டால்.. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதை பாருங்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளார்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications