8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்
டோக்கியோ: இந்தியா 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளதாக ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
குவாட் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க 2 நாள் சுற்றுப் பயணமான பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
பயணத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

டிஜிட்டல் இந்தியா
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையை கட்டமைத்ததில் ஜப்பான் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், டெல்லி - மும்பை தொழில்துறை காரிடார் போன்றவை இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். உலகளவில் நிகழும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன. பருவ நிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

ஜனநாயகம் வலிமையாகி உள்ளது
பசுமையான எதிர்காலத்தையும், சர்வதேச சூரிய திறன் கூட்டமைப்பை அமைப்பது தொடர்பாக இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதத்தை வன்முறை, பயங்கரவாதம், பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க உலகம் புத்தரின் வழியை பின்பற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நாம் நம் நாட்டின் ஜனநாயகத்தை வலிமையாகவும் மீண்டு வரும் தன்மை கொண்டதாகவும் மாற்றி இருக்கிறாது.

இந்தியாவில் மக்களின் அரசு
நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான வலுவான தூண்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு நபரின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான, ஒருங்கிணைந்த மற்றும் கசிவு தன்மையற்ற நிர்வாகத்தை தரும் அமைப்பை கட்டமைப்பதற்காக நாம் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவில் உண்மையான அரசாங்கம் மக்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பாரத் சலோ, பாரத் சே ஜூடோ
நம் நாட்டின் ஜனநாயகம் வலுபெற்று வருவதற்கான மிக முக்கிய காரணம் இதுதான். ஜப்பானில் வசித்து வரும் இந்தியர்கள் பாரத் சலோ, பாரத் சே ஜூடோ' (இந்தியாவுக்கு வாருங்கள், இந்தியாவுடன் சேருங்கள்) வில் இணைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 2 நாள் ஜப்பான் பயணத்தில் குவாட் நாடுகளில் தலைவர்களை சந்தித்து, இந்தோ - பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான பல்வேறு வியூகங்கள் வகுப்பது குறித்து பேச உள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications