‛2024ல் மீண்டும் மோடி’ ஜெர்மனியில் அதிர்ந்த கோஷம்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கள் ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என ஆர்வமாக தொடர்ந்து கோஷமிட்டது அரங்கத்தை அதிர செய்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
கொரோனா பரவல் காரணம் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளாமல் இருந்தார். தற்போது உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
இதனால் பிற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பா சென்றுள்ளார்.

ஜெர்மனியில் பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 25 நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்ற பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார். அங்கு ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்சினுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள திரையரங்கில் இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அரங்கத்தை அதிரவைத்த கோஷம்
பிரதமர் நரேந்திர மோடி அரங்குக்கு வருவதற்கு முன்பு 2024 மோடி ஒன்ஸ்மோர் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர செய்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 2024, 2019 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான நிலையில் 2024ல் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று அவர் ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

மோடி மகிழ்ச்சி
இதில் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ஜெர்மனியில் இந்தியாவின் குழந்தைகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை சந்திப்பது என்பது எனக்கான அதிர்ஷ்டம். பலர் ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் இருந்து பெர்லினுக்கு இங்கு வந்திருக்கிறீர்கள். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியர்கள் என்பவர்கள் இந்தியாவில் வாழ்பவர்கள் மட்டுமல்ல. அதில் நீங்களும் அடங்குவீர்கள்.
Recommended Video

இன்று டென்மார்க்கில் மோடி
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் தலைமையில் 6வது இந்தியா-ஜெர்மனி மாநாடு நடந்தது. இதில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தனாது. ஜெர்மனியை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெட்ரிக்சன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று கோபன்ஹேகன் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள 2வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டில் மோடி பங்கேற்கிறார். பிறகு இந்தியா வரும் வழியில் பாரீசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications