மியான்மரில் மீண்டும் முஸ்லிம்கள் மீது பவுத்த பிக்குகள் கொடூர தாக்குதல்!
மண்ட்லே: மியான்மர் நாட்டில் மீண்டும் முஸ்லிம்கள் மீது பவுத்த பிக்குகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மியான்மரின் மேற்கு மாகாணமான ரக்கைனில் கடந்த 3 ஆண்டுகாலமாக பெரும்பான்மை பவுத்தர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே பெரும் மோதல் நீடித்து வருகிறது.
நடப்பாண்டில் ரக்கைன் மாகாணத்தில் சுமார் 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் மியான்மரின் 2வது முக்கிய நகரமான மண்ட்லேயில் முஸ்லிம்கள் மீது பவுத்த பிக்குகள் நேற்று கொடுந்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட பவுத்த பிக்குகள் தடிகள், இரும்பு கடிகளுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மண்ட்லேயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.