போர்க்களத்தில் பூத்த பூ.. குண்டுகளுக்கு நடுவே மெட்ரோ சுரங்கத்தில் எதிரொலித்த குவா, குவா சத்தம்!
கீவ்: உக்ரைனில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்கும் நிலையில் தலைநகர் கீவ் மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சம் அடைந்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால் அங்கு குண்டுமழை பொழிகிறது.
இதில் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர். ஏராளமான மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கங்களில் தஞ்சம் அடைந்துள்னளர். இந்நிலையில் மெட்ரோ சுரங்கத்தில் தங்கிய கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

சுரங்கத்தில் பிரசவம்
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் 23 வயது நிரம்பிய கர்ப்பிணி, கீவ் நகரில் உள்ள மெட்ரோ சுரங்க பாதையில் பாதுகாப்பாக இருந்தார். நேற்று திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அலறி துடித்தார். இதையடுத்து அங்கு இருந்த பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இரவு 8.30 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பெயர் என்ன
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கர்ப்பிணி, குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தைக்கு மியா என பெயரிடப்பட்டுள்ளது. போருக்கு நடுவே பிறந்த இந்த குழந்தையை உக்ரைனிய அற்புதம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இன்னொருவருக்கு ஆண் குழந்தை
இதேபோல் இன்னொரு பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண் மற்றும் அவரது குழந்தையின் படத்தை முறையான அனுமதியுடன் பிரசவம் பார்த்த டாக்டர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உருக்கமாக சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.

அழித்தொழிக்க முடியாது
அவரது பதிவில் ‛‛மனித இனத்தை அழித்தொழிக்க எத்தனை சர்வாதிகாரிகள் வந்தாலும் அது முடியாது. இறப்பு ஒருபக்கம் இருந்தாலும், பிறப்பு மற்றொரு பக்கம் நிகழும். இதுதான் இயற்கையின் விதி. இதை யாரால் மாற்ற முடியும்?'' என உருக்கமாக கூறியுள்ளார்.
உக்ரைன் தொடர்பாக ராணுவ தாக்குதல், சிரமப்படும் மக்கள் தொடர்பான படங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வரும் நிலையில், பிறந்த 2 குழந்தைகளின் படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும், போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications