எல்லை பிரச்சனை தற்காலிகமான ஒன்று... சொல்கிறார் சீனா வெளியுறவு அதிகாரி
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான். அதனைக் கண்டுகொள்ள தேவையில்லை என்று சீன வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்: இந்திய சீன எல்லைப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவிவரும் வேளையில், சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் இந்திய சீன எல்லையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியை ஒட்டி சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ராணுவம் அதிரடியாக வீரர்களை குவித்தது.
இதில் ஆவேசமடைந்த சீனா, இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என கூறி ஏராளமான ராணுவ வீரர்களை எல்லையில் குவித்தது. இதனால் அந்தப் பகுதியில் போர் மேகம் சூழந்தது.

மோடி-சீன அதிபர் சந்திப்பு
இரு நாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் திடீர் போர்ப் பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின. இதற்கிடையே, ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து, கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.

ஊடகங்களின் பரப்பு
இதனால், போர்ப் பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு உயர் அதிகாரி கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தற்காலிகமான ஒன்றுதான்
"எல்லைப்பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான். அதுநிலையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே வணிகம், பண்பாட்டு அளவிலான உறவுகள் வலுவாக உள்ளன.
Recommended Video


உறவு தொடர்கிறது
இந்திய தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை பரபரப்பாக விவாதிக்கின்றன. அதைக் கண்டு கவலை கொள்ள தேவையில்லை. இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளதோ, அதனைக் கொண்டுதான் சீனா, அந்நாட்டுடன் உறவை தொடர்கிறது" என சீன வெளியுறவு அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications