ஈரானில் திடீரென முடங்கிய இணைய சேவை! இன்னைக்கு நைட் சம்பவம் இருக்கு.. களத்தில் இறங்கும் அமெரிக்கா?
தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த வார்னிங்கை, ஈரான் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்றிரவு அமெரிக்கா, நேரடியாக களத்தில் இறங்கலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
ஈரான் நேரப்படி, மாலை 5.30 மணியிலிருந்து இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சேதம் ஏற்பட்டு, அதனால் சேவை துண்டிக்கப்படவில்லை. மாறாக ஈரான் அரசே இணைய சேவையை துண்டித்திருக்கிறது. இதனை நெட்ப்ளாக்ஸ் (NetBlocks) மற்றும் கென்டின் (Kentinc) போன்ற இணைய இணைப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இது குறித்து அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமே மொஹாஜெரானி கூறுகையில், "இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக இணைய சேவை துண்டிக்கப்படவில்லை. மாறாக இஸ்ரேலிய சைபர் தாக்குதல்களை தவிர்க்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அரசு அதிகாரப்பூர்வமாக இந்த உத்தரவை கொடுத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டு இணையதளங்களை அணுகப் பயன்படுத்தப்படும் VPN (Virtual Private Network) சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பிரபலமான சமூக ஊடகப் பயன்பாடுகளும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவையும் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் புதிய ஆப்களை பதிவிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் மாற்றாக, ஈரான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் வெப்சைட்கள் ஓபனாகின்றன. இது 'ஹலால் நெட்' (Halal Net) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், என்னதான் நெட்வொர்க் முடக்கப்பட்டிருந்தாலும், எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவையை வழங்க முன் வந்திருக்கிறது. இது அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளைத் தாண்டி இணைய சேவையை வழங்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்டெர்நெட் சேவையை முடக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, மேலே சொன்னதை போல.. இஸ்ரேலின் சைபர் தாக்குதல். சைபர் தாக்குதலில் இஸ்ரேல் எவ்வளவு கை தேர்ந்தது என்பதை உலகம் அறியும். சமீபத்தில் பேஜர் மற்றம் வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினரை இஸ்ரேல் திணறடிக்க செய்தது. எனவே இப்படியான தாக்குதல்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவது காரணம் அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல். அதாவது இன்று இரவு அமெரிக்கா நேரடியாக தாக்குதுலை நடத்தக்கூடும் என்பதால் நெட்வொர்க் சேவை முடக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் காசாவில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் அப்பகுதியில் இணைய சேவையை துண்டித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
-
அமெரிக்காவால் 1970க்கு பிறகு உலகம் சந்திக்கும் கடுமையான நெருக்கடி! எச்சரித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்! -
27வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்! மொத்த வளைகுடாவும் பதறுது.. சிக்கலில் அமெரிக்கா! -
பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்! ஈரான் கை ஓங்குது! -
கண்கள் சிவந்த டிரம்ப்.. இஸ்ரேலுக்கு எதிராகவே திரும்பிய அமெரிக்கா.. ஒரே நைட்டில் எல்லாமே மாறுதே -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரியுது.. பங்குச்சந்தை எகிறியது! உலக நாடுகள் நிம்மதி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க -
வெனிசுலாவிலிருந்து.. அமெரிக்காவுக்கு வந்த தங்க கட்டிகள்! மொத்த மதிப்பு பல நூறு கோடிகள்! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications