'LED' விளக்கைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளியை உமிழும் டயோடுகளை (அதாவது லெட் எனப்படும் LED விளக்குகள்) கண்டுபிடித்ததற்காக இந்தாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற வல்லுனர் ஏற்படுத்திய இந்த பரிசு, அந்த நாட்டை சேர்ந்த நோபல் பரிசு அகாடமி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது. இதில் முதலாவதாக மருத்துவ துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மூளை நரம்பு செல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக, பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானியான ஜான் ஓகீப் மற்றும் நார்வேயை சேர்ந்த மருத்துவ ஆய்வுத்தம்பதியான எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறுபவர்கள் பெயர் இன்று அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பரிசையும் மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ ஆகியோருக்கும், அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுராவிற்கும் இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத புதிய எரி சக்தியான நீல ஒளியை உமிழும் டயோடுகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். வழக்கமான ஒளியை விட கூடுதலான ஒளியும் இந்த டயோடுகள் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும் விழாவில் சுவீடன் அரசர் வழங்குகிறார்.
இதற்கிடையே இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு 9-ந் தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications