118 பேருடன் லிபியா விமானம் கடத்தல்… முதல் கட்டமாக 65 பயணிகள் விடுவிப்பு
மால்டா: செபாவில் இருந்து புறப்பட்டு திரிபோலி நோக்கி 118 பேருடன் சென்ற விமானம் கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும், விமானத்தை கடத்திய இருவர் சரணடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று லிபியாவின் செபாவில் இருந்து 118 பயணிகளுடன் திரிபோலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், பயணிகள் போல் விமானத்தில் வந்தவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் விமானத்தைக் கொண்டு வந்தனர்.

விமான ஓட்டியை மிரட்டி விமானத்தை மால்டாவில் தரையிறங்கும்படி கட்டளையிட்டுள்ளனர். இதனையடுத்து, மிரண்டு போன விமானிகள் விமானத்தை மால்டா நோக்கி திருப்பினர். பின்னர், மால்டாவை நெருங்கியதும் விமான நிலைய அதிகாரிகளிடம் முறைப்படி விமான ஓட்டிகள் அறிவித்து அனுமதி பெற்று பின்னர் விமானத்தை தரையிறக்கினர்.
கடத்தப்பட்ட விமானத்தில் 82 ஆண்களும், ஒரு குழந்தை உள்பட 28 பெண்களும், 8 விமான பணியாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை 2 தீவிரவாதிகள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகியது. திடீரென நடந்த இந்த சம்பவத்தால் மால்டா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மால்டா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முதல்கட்டமாக 65 பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர். பின்னர் அனைத்து பயணிகளும் விடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கடத்தல்காரர்கள் சரணடைந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடத்தல் பரபரப்பைத் தொடர்ந்து மால்டாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் இத்தாலியன் தீவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications