விமானி அறையில் பைலட்களுடன் இனி 3வது நபரும்: மலேசிய ஏர்லைன்ஸ் உத்தரவு
கோலால்பூர்: எம்.ஹெச். 370 விமானம் மாயமான பிறகு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.ஹெச். 370 கடந்த 8ம் தேதி சீனா கிளம்பிச் சென்றபோது 239 பேருடன் மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டது என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
விமானம் கடலுக்குள் விழ விமானத்தின் கேப்டன் காரணமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

கேப்டன் ஷா
மனைவியை விட்டுப் பிரிந்த கேப்டன் ஜஹரி அகமது ஷா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த உறவிலும் சிக்கல் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த ஷா தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டதாக செய்திகள் வெளியாகின.

மலேசியா ஏர்லைன்ஸ்
எம்.ஹெச். 370 விவகாரத்திற்கு பிறகு மலேசியா ஏர்லைன்ஸ் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விமானி அல்லது துணை விமானி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயற்கை உபாதையை கழிக்க விமானி அறையில் இருந்து வெளியேறினால் சிப்பந்திகளில் ஒருவர் அந்த அறையில் இருக்க வேண்டும். அதாவது விமானி அறையில் விமானியோ, துணை விமானியோ இனி தனியாக இருக்கக் கூடாது.

புதிய விதிமுறை
மலேசியா ஏர்லைன்ஸ் விமானி அறையில் எப்பொழுதும் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எம்.ஹெச். 370 விமானம் மாயமான ஒரு வாரத்திலேயே அமல்படுத்தியுள்ளது. ஆனால் அது இன்று தான் உலகிற்கு தெரிய வந்துள்ளது.

விமானி அறை
விமானி அறைக்கதவு எப்பொழுது எல்லாம் திறக்கிறதோ அப்பொழுது எல்லாம் அதன் வாயிலில் விமான சிப்பந்திகளில் ஒருவர் நிற்க வேண்டும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications