இலங்கைக்கு இன்னொரு மூக்குடைப்பு.. மொரீஷியஸ் பிரதமரும் புறக்கணிப்பு

ஏற்கனவே கனடா பிரதமர், இந்தியப் பிரதமர் ஆகியோர் இந்த மாநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ள நிலையில் தற்போது மொரீஷியஸ் பிரதமரும் மாநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமாக இருப்பதால் தான் மாநாட்டுக்குப் போக விரும்பவில்லை என்று மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராம்கூலம் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைக்குப் போவது சரியாக இருக்காது என்பதால் நான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் எல்லாவற்றையும் விட மனித உரிமைகள்தான் முக்கியம். எனவே இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க விரும்பவில்லை என்றார்.
இருப்பினும் மொரீஷியஸ் சார்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆர்வின் பூலெல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொரீஷியஸ் நாடு1968ம் ஆண்டு சுதந்திரமடைந்தது. அதன் பின்னர் காமன்வெல்த் மாநாடு ஒன்றை அதன் பிரதமர் புறக்கணிப்பது இதுவே முதல் முறையாகும்.
அடுத்த காமன்வெல்த் மாநாட்டை 2015ம் ஆண்டு மொரீஷியஸ்தான் நடத்தவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications