மாயமான விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா?: தகவல்களை மறுஆய்வு செய்யும் நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: மாயமான மலேசிய விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா என்பதை உறுதி செய்ய இதுவரை சேகரித்த தகவல்களை மறுஆய்வு செய்ய உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமானத்தை தேடி வருகிறது.

சிக்னல்

சிக்னல்

தெற்கு இந்திய பெருங்கடலில் கருப்புப் பெட்டியில் வரும் சிக்னல்கள் கிடைத்த இடத்தில் விமானத்தை தேடும் பணி 7 வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

ஒரு பாகம் கூட

ஒரு பாகம் கூட

இத்தனை நாட்களாக பல நாட்டு விமானங்கள், கப்பல்கள் மற்றும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஆகியவை தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

மறுஆய்வு

மறுஆய்வு

மலேசிய விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா என்பதை உறுதி செய்ய இதுவரை கிடைத்த தகவல்களை நிபுணர்கள் அடங்கிய சர்வதேச குழு இன்று முதல் மறுஆய்வு செய்கிறது.

தேடல் பகுதி

தேடல் பகுதி

கடலின் தரை பரப்பில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தேடல் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டு

ஒரு ஆண்டு

கடலுக்கு அடியில் விமான பாகங்களை தேடும் பணி ஒரு ஆண்டு காலம் வரை கூட நடக்கலாம் என்று தேடல் பணிக் குழுவின் தலைவரான ஆங்கஸ் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+