தாக்குதல் ஸ்டைலை மாற்றும் ஐஎஸ்ஐஎஸ்.. திணறும் பாதுகாப்பு படையினர்.. கவனிக்கும் இந்தியா!
பாரீஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது தாக்குதல் முறையை புதிது புதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை உயிர்களை கொல்ல வேண்டும் என்பது மட்டுமே. இதனால் பாதுகாப்பு ஏஜென்சிகளால், தாக்குதல் நடத்த செல்வோரை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது, துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது லாரியை ஏற்றி கொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், ஒரு ஆய்வு கூடம் போல செயல்படுகிறது. உயிர்களை எப்படி கொல்வது என்பது பற்றிய சிந்தனையிலேயே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் உள்ளனர். இதனால் புதுபுது வழிமுறைகளை கண்டறிந்து, அதை அரங்கேற்றி, மகிழ்கிறார்கள்.
உலகம் முழுக்க தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் பிரதமர் போன்ற விஐபிகளை சந்திக்க செல்வோரைத்தான் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதிப்பார்கள். இப்போது சென்னை ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்றாலும், கோயம்பேடு பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்றாலும் கூட மெட்டல் டிடெக்டர் சோதனையை கடக்க வேண்டியுள்ளது.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை எடுத்து சென்றால் கண்டறியும் நவீன கருவிகள் வந்துவிட்டன. ஸ்கேனர் மெஷின்களும் உள்ளன. எனவேதான் தாக்குதல் வழிமுறையை மாற்றியுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

பாரீசின், நைஸ் நகரில் இன்று நடைபெற்ற தாக்குதலும் இப்படிப்பட்ட எதிர்பாராத தாக்குதல். தீவிரவாத கருத்துக்களால் மூளை சலவை செய்யப்பட்ட தனி மனிதர்களால் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை 'ஓநாய் தாக்குதல்' என்கிறார்கள் பாதுகாப்பு படையினர்.
தீவிரவாதிகள் எல்லை கடந்து நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்க பாதுகாப்பு படையினரால் முடியும். ஆனால், உள் நாட்டுக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல் மாதிரியிலான ஓநாய் தாக்குதல் நபர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதுதான் பாதுகாப்பு படையினருக்கு தலைவலி.
உள் நாட்டு போரால் பாதிக்கப்படும் வளைகுடா நாடுகளில் இருந்து பிரான்சுக்கு, அதிகப்படியான மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். இதில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்களும் இருக்கலாம். மேலும், பிரான்சிலுள்ளவர்களை இணையதளம் மூலம் மூளைச்சலவை செய்தும் தனி மனிதர்களை கொண்டு தீவிரவாதிகள் தாக்குதலை நடத்துகிறார்கள்.
லாரியை விட்டு கொல்வது, கட்டிடத்தில் இருந்து கீழே பிடித்து தள்ளி கொல்வது, தலையில் கல்லை போட்டு படுகொலை செய்வது என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நோக்கம் கொலை மட்டுமே என்பதால், பாதுகாப்பு படையினர் திணறுகிறார்கள். இந்திய உளவுத்துறை, பாதுகாப்புத்துறையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் வழிமுறை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications