தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு ரூ 12 ஆயிரம் ‘வெகுமதி’ கூப்பன்: மது, சிகரெட் வாங்கியதால் பரபரப்பு
லண்டன்: இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட வெகுமதி கூப்பன்களை பயன்படுத்தி அதிக அள்வில் சிகரெட்டும், மதுவும் வாங்கப் பட்டதால் இங்கிலாந்து அரசு அதிர்ந்து போயுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலேயே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைவாக இருக்கும் டெர்பிஷெரி, சவுத் யார்க்ஷெரி ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தினார்கள். குழந்தையின் முதல் உணவான நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த தாய்ப்பாலை சிலத் தாய்மார்கள் தரத் தயங்குகிறார்கள்.
காரணம் அதன் மூலம் தங்களாது அழகு சீர்குலைந்து விடும் என்ற அச்சமே. ஆனால், தாய்ப்பால் தருவதன் மூலம் குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் உடல் ரீதியாக அதிக நன்மைகள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை.
எனவே, வெகுமதிப் பரிசுகள் கொடுத்தாலாவது, தாய்ப்பால் தரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடிவு செய்தது இங்கிலாந்து அரசு. அதன்படி, இங்கிலாந்து நாட்டில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனம் மூலம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வெகுமானம் கொடுக்கும் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.
அதன்படி குழந்தைக்கு 6 வாரம் வரையில் தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு ரூ.12 ஆயிரமும், 6 மாதங்கள் வரையில் பால் கொடுக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரமும் வெகுமதியாக (கிப்டு வவுச்சர்) வழங்கப்பட்டது.
அந்த கூப்பன்களைப் பயன் படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, உபயோகமான பொருட்கள் வாங்குவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூப்பனைப் பெற்ற பெரும்பான்மையானவர்கள் அதனைப் பயன் படுத்தி சிகரெட், மது போன்ற போதைப் பொருட்களைத் தான் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications