ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!
வெலிங்டன்: இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது.
இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்தியா பரிதாபம்
இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டு உலக நாடுகள் போட்டி, போட்டு உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து என பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் நட்பு நாடான நியூசிலாந்தும் நமது நாட்டுக்கு கை கொடுப்பதாக அறிவித்த்துள்ளது.

நியூசிலாந்து உதவி
அதாவது இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை ((சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா கூறியதாவது:- நாங்கள் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். இந்த கடினமான நேரத்தில் இந்திய அரசு மற்றும் உயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடும் இந்தியாவின் முன்னணி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் அயராத உழைப்புகளை பாராட்டுகிறோம்.

நடைமுறை உதவி
தற்போதையை கொரோனா தொற்றை சமாளிக்கும் விதமாக இந்தியாவுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளோம்;; என்று வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா தெரிவித்தார். உதவி செய்வதற்கான நற்பெயரைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்புக்கு( சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்) நாங்கள் செய்த பங்களிப்பு மூலம் இந்தியாவுக்கு செய்யக்கூடிய மிகவும் நடைமுறை உதவி என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிகள்
இந்தியாவின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து இந்திய அரசு உதவ எப்போதும் தயாராக இருப்போம் என்று நானாயா மஹுதா கூறினார். இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ பொருட்களை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.எஃப்.ஆர்.சி) இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications