Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது.

இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்தியா பரிதாபம்

இந்தியா பரிதாபம்

இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டு உலக நாடுகள் போட்டி, போட்டு உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து என பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் நட்பு நாடான நியூசிலாந்தும் நமது நாட்டுக்கு கை கொடுப்பதாக அறிவித்த்துள்ளது.

நியூசிலாந்து உதவி

நியூசிலாந்து உதவி

அதாவது இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை ((சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா கூறியதாவது:- நாங்கள் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். இந்த கடினமான நேரத்தில் இந்திய அரசு மற்றும் உயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடும் இந்தியாவின் முன்னணி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் அயராத உழைப்புகளை பாராட்டுகிறோம்.

நடைமுறை உதவி

நடைமுறை உதவி

தற்போதையை கொரோனா தொற்றை சமாளிக்கும் விதமாக இந்தியாவுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளோம்;; என்று வெளியுறவு மந்திரி நானாயா மஹுதா தெரிவித்தார். உதவி செய்வதற்கான நற்பெயரைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்புக்கு( சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்) நாங்கள் செய்த பங்களிப்பு மூலம் இந்தியாவுக்கு செய்யக்கூடிய மிகவும் நடைமுறை உதவி என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிகள்

சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிகள்

இந்தியாவின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து இந்திய அரசு உதவ எப்போதும் தயாராக இருப்போம் என்று நானாயா மஹுதா கூறினார். இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ பொருட்களை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.எஃப்.ஆர்.சி) இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+