விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் மாயம்!

Subscribe to Oneindia Tamil

கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உடைமைகள் விமான நிலையத்தில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உலகின் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களுக்கான ஜி-20 மாநாடு இந்த வாரத்தின் இறுதியில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில், மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்தார்.

உடைமைகள் பரிசோதனை:

உடைமைகள் பரிசோதனை:

சிட்னியில் இறங்கி கெய்ர்ன்ஸ் செல்வதற்காக இணைப்பு விமானத்தில் செல்லும் முன் விமானநிலையத்தில் உடைமைகள் பரிசோதனைக்கு அனுப்பட்டது.

மாயமான உடைமைகள்:

மாயமான உடைமைகள்:

ஆனால் பரிசோதனைக்கு பிறகு தனது உடைமைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டுவிட்டரில் தகவல்:

டுவிட்டரில் தகவல்:

இந்த தகவலை டிவிட்டரில் தெரிவித்த நிர்மலா சீத்தாரமன், " இணைப்பு விமானத்தை பிடிப்பதற்காக சிட்னியில் இறங்கினோம். பரிசோதனை செய்யப்பட்ட எனது உடமைகள் கண்டு பிடிக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

 வழக்கமான உடைகள்:

வழக்கமான உடைகள்:

சிறிது நேரம் கழித்து வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், "கெய்ர்ன்ஸ் செல்வதற்கான இணைப்பு விமானத்தில் உள்ளோம். சூட்கேஸில் இருந்த எனது வழக்கமான உடைகள் அனைத்தும் மாயமாகியுள்ளது.

ஆபத்தான நிலைமை:

ஆபத்தான நிலைமை:

கெய்ர்ன்ஸில் புடவைகளை வாங்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை. நிலைமை ஆபத்தாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உடைமைகள் கண்டுபிடிப்பு:

உடைமைகள் கண்டுபிடிப்பு:

இதனிடையே, காணாமல் போன உடைமைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆறு மணிநேரத்தில் கெய்ர்ன்ஸுக்கு அது சென்றடையும் என்று ஏர் இந்தியா மேலாளர் மாது மாதேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+