மாயமான விமான பயணிகள் உயிர் பிழைக்கும் அதிசயம் நடக்கலாம்: மலேசிய அமைச்சர் ஹுசைன்
கோலாலம்பூர்: தெற்கு இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்ததாக தெரியவில்லை. இருப்பினும் அதிசயங்கள் நடக்கும் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சீன மற்றும் ஆஸ்திரேலிய கப்பல்கள் கண்டறிந்தன. அதே போன்ற ஒலியை அமெரிக்க கடற்படையின் அதிநவீன கருவியும் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் கூறுகையில்,

பயணிகள்
விமானத்தில் பயணித்தவர்களில் யாராவது உயிருடன் உள்ளார்களா என்பதை அறியவே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி பயணிகள் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை.

அதிசயம்
நான் எப்பொழுதுமே சொல்வேன் அதிலும் குறிப்பாக பயணிகளின் குடும்பத்தாருக்கு சொல்ல விரும்புவது அதிசயங்கள் நடக்கும் என்பது தான். நாம் தொடர்ந்து நம்புவதுடன் உயிர் பிழைத்து யாராவது வர பிரார்த்தனை செய்வோம் என்றார்.

தேடல்
மலேசிய விமானத்தின் தேடல் இன்று 31வது நாளாக நடந்து வருகிறது. மொத்தம் 12 விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை 2 லட்சத்து 34 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் தேடி வருகின்றன.

உறவினர்கள்
விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அது கடலுக்குள் விழுந்து மூழ்கியதாக எப்படி அறிவிக்கலாம் என்று பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications