அவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை
கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததை அடுத்து, அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு ராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே, ஐ.நா. மன்றத்தில் வட கொரியாவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
- அமெரிக்கா-தென் கொரியா கூட்டாக நடத்திய ஏவுகணை சோதனை
- '’உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது’’; அமெரிக்கா
வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனையை அந்நாட்டின் கூடுதல் ராணுவ பலத்தை குறிக்கிறது என்று வர்ணித்த நிக்கி ஹாலே, வட கொரியா மீது வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நிக்கி ஹாலேவின் கருத்துக்கள் வெளியாகி சிலமணி நேரங்களில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாக ஜப்பானிய கடலில் பல ஏவுகணைகளை வீசினர்.
அதே நேரத்தில், வட கொரியாவுக்கு எதிரான விரோத கொள்கை போக்கை அமெரிக்கா கைவிடும்வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என வட கொரியா தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை, தொடர் சோதனைகளில் சமீபத்தியதாகும். ஐ.நா பாதுகாப்பு சபையின் தடை உத்தரவை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
- இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?
- டியர் மிஸ்டர் மோதி ஐ லவ் யூ - மோஷே
- “கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” - செளதி
இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மேட்டிஸ் மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டோமோமி இனாடா ஆகியோர், இந்த ஏவுகணை சோதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டும் செயல் என்று கண்டித்துள்ளனர்.
ஜப்பானிற்கு பாதுகாப்பு வழங்குவதிலும், போர் சூழல் ஏற்படும் அபாயத்திலிருந்து தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
- ''இஸ்லாமியவாத தீவிரவாதத்தை செளதி ஊக்குவிக்கிறது'' : ஆய்வு அமைப்பு அறிக்கை
- கத்தார் நெருக்கடி: சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கெய்ரோவில் சந்திக்கின்றன
- “கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” - செளதி
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!













Click it and Unblock the Notifications