காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்
ஜெனிவா: கொரோனா பரவல் எப்படி நிகழக்கூடும் என்பது பற்றி உலக சுகாதார அமைப்பு (W.H.O.) மேலும் சில எச்சரிக்கைகளை பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடுவது மற்றும் எச்சில் போன்றவற்றின் மூலம்தான் பரவும் என ஹூ கூறி வந்தது. ஆனால், காற்று வாயிலாகவும் வைரஸ் பரவக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீபத்தில், ஹூ அமைப்புக்கு கடிதம் எழுதி, கொரோனா காற்றில் பரவும் என்று அறிவிக்க வலியுறுத்தினர். இதையடுத்து ஹூ ஆய்வுகளை மேற்கொண்டது.

அறிகுறி இல்லாத நபர்கள்
இதையடுத்து புதிய அப்டேட்டை ஹூ வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், காய்ச்சல், தும்மல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாத நபர்களாலும், பிறருக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்று ஹூ தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அறிகுறிகளுடன் இருந்தாலும் இல்லாதபோதும் வைரஸை பரப்ப முடியும் என்கிறது ஹூ. இது முக்கியமான அறிவிப்பாகும். ஆனால், தாமதமான அறிவிப்பாகும். பல சமீபத்திய ஆய்வுகளைப் பற்றி குறிப்பிட்டு, WHO மேலும் கூறுகையில், நெரிசலான இன்டோர் பகுதிகளில் மனிதர்களிடையே கொரோனா காற்றில் பரவக் கூடும். ஒருவர் பாடும்போதோ, உணவகங்களில் அல்லது உடற்பயிற்சி கூடங்களில், இதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்டோர் பகுதிகள்
குறுகிய தூரமாக இருந்தால் இப்படி காற்றில் பரவும். குறிப்பாக உட்புற இடங்களில், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நீண்ட நேரம் இருக்க நேரிட்டாலோ, போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்களாக அவை இருந்தாலோ, இதுபோன்ற பரவலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த வைரஸ் வான்வழியால் பரவுவதாக நினைக்கவில்லை. அதேநேரம், வெளிப்புறமாக இருந்தாலும், காற்றில் சிறிது தூரம் பறந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல், பேச்சு அல்லது பாடும்போது வைரஸ் காற்று வழியாக குறுகிய தூரம் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடுவது
பாதிக்கப்பட்ட நபர் தொடுவது வழியாக மேற்பரப்புகள் வழியாகவும் பரவுகிறது. அதாவது கதவு, லிப்ட் பொத்தான்கள், ஹேண்ட்ரெயில்கள், தொலைபேசிகள், சுவிட்சுகள், பேனாக்கள், விசைப்பலகைகள் மற்றும் மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப் வழியாக கூட பரவக் கூடும். இப்படித்தான், அதிகமாக பரவுகிறது. எனவேதான், இந்த மேற்பரப்புகளில் கிருமிநாசினி போட்டு சுத்தப்படுத்துவது அவசியப்படுகிறது.
Recommended Video

ஆய்வுகள் தேவை
வெவ்வேறு பரிமாற்ற பாதைகளின் வழியாக கொரோனா பரவுவதை தெளிவுபடுத்துவதற்கு அவசர உயர்தர ஆராய்ச்சி தேவை. காற்றின் வழியாக கொரோனா பரவ தேவையான வைரஸின் அளவு, அறிகுறியற்ற மற்றும் அறிகுறி உள்ளோரிடமிருந்து பரவும் அளவு போன்றவற்றை சரியாக அளவிட ஆய்வுகள் தேவை. இவ்வாறு WHO கூறியுள்ளது. முன்பு, சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் போன்ற கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பு இருப்பதாக, WHO கூறியிருந்தது. இப்போது அதன் கருத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஹு செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என அமெரிக்கா, விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications