காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்
ஜெனிவா: கொரோனா பரவல் எப்படி நிகழக்கூடும் என்பது பற்றி உலக சுகாதார அமைப்பு (W.H.O.) மேலும் சில எச்சரிக்கைகளை பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடுவது மற்றும் எச்சில் போன்றவற்றின் மூலம்தான் பரவும் என ஹூ கூறி வந்தது. ஆனால், காற்று வாயிலாகவும் வைரஸ் பரவக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீபத்தில், ஹூ அமைப்புக்கு கடிதம் எழுதி, கொரோனா காற்றில் பரவும் என்று அறிவிக்க வலியுறுத்தினர். இதையடுத்து ஹூ ஆய்வுகளை மேற்கொண்டது.

அறிகுறி இல்லாத நபர்கள்
இதையடுத்து புதிய அப்டேட்டை ஹூ வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், காய்ச்சல், தும்மல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாத நபர்களாலும், பிறருக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்று ஹூ தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அறிகுறிகளுடன் இருந்தாலும் இல்லாதபோதும் வைரஸை பரப்ப முடியும் என்கிறது ஹூ. இது முக்கியமான அறிவிப்பாகும். ஆனால், தாமதமான அறிவிப்பாகும். பல சமீபத்திய ஆய்வுகளைப் பற்றி குறிப்பிட்டு, WHO மேலும் கூறுகையில், நெரிசலான இன்டோர் பகுதிகளில் மனிதர்களிடையே கொரோனா காற்றில் பரவக் கூடும். ஒருவர் பாடும்போதோ, உணவகங்களில் அல்லது உடற்பயிற்சி கூடங்களில், இதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்டோர் பகுதிகள்
குறுகிய தூரமாக இருந்தால் இப்படி காற்றில் பரவும். குறிப்பாக உட்புற இடங்களில், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நீண்ட நேரம் இருக்க நேரிட்டாலோ, போதுமான காற்றோட்டம் இல்லாத இடங்களாக அவை இருந்தாலோ, இதுபோன்ற பரவலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த வைரஸ் வான்வழியால் பரவுவதாக நினைக்கவில்லை. அதேநேரம், வெளிப்புறமாக இருந்தாலும், காற்றில் சிறிது தூரம் பறந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல், பேச்சு அல்லது பாடும்போது வைரஸ் காற்று வழியாக குறுகிய தூரம் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடுவது
பாதிக்கப்பட்ட நபர் தொடுவது வழியாக மேற்பரப்புகள் வழியாகவும் பரவுகிறது. அதாவது கதவு, லிப்ட் பொத்தான்கள், ஹேண்ட்ரெயில்கள், தொலைபேசிகள், சுவிட்சுகள், பேனாக்கள், விசைப்பலகைகள் மற்றும் மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப் வழியாக கூட பரவக் கூடும். இப்படித்தான், அதிகமாக பரவுகிறது. எனவேதான், இந்த மேற்பரப்புகளில் கிருமிநாசினி போட்டு சுத்தப்படுத்துவது அவசியப்படுகிறது.
Recommended Video

ஆய்வுகள் தேவை
வெவ்வேறு பரிமாற்ற பாதைகளின் வழியாக கொரோனா பரவுவதை தெளிவுபடுத்துவதற்கு அவசர உயர்தர ஆராய்ச்சி தேவை. காற்றின் வழியாக கொரோனா பரவ தேவையான வைரஸின் அளவு, அறிகுறியற்ற மற்றும் அறிகுறி உள்ளோரிடமிருந்து பரவும் அளவு போன்றவற்றை சரியாக அளவிட ஆய்வுகள் தேவை. இவ்வாறு WHO கூறியுள்ளது. முன்பு, சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் போன்ற கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பு இருப்பதாக, WHO கூறியிருந்தது. இப்போது அதன் கருத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஹு செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என அமெரிக்கா, விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications