ட்விஸ்ட்! திரும்பிய வரலாறு.. பதவியை இழந்த இம்ரான் கான்? பிரதமராக இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியீடு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்த நிலையில், இம்ரான் கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், கடைசி பந்து வரை விளையாடுவேன் ராஜினாமா செய்யப்போவது இல்லை என அவர் கூறியிருந்தார்.
இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், அதிரடி திருப்பமாக இவ்விவகாரத்திம் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டி துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

பிரதமர் இம்ரான் கான்
மேலும் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி தேசிய சட்டமன்றத்தை கலைத்ததோடு காபந்து பிரதமராக இம்ரான் கானே நீடிப்பார் எனவும், 3 மாதங்களில் அங்கு மீண்டும் தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இதற்கிடையில் 195 உறுப்பினர்களின் ஆதரவுடன் PML-N தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக எதிர்க்கட்சி அணி அறிவித்தது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீண்டும் செல்லுபடியாக்கும் வகையில் சபாநாயகராக அயாஸ் சாதிக்கும் நியமிக்கப்பட்டார்.

ராணுவ தலையீடு புகார்
இம்ரான் விவகாரத்தில் ராணுவ தலையீடு இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டிய நிலையில், சக்திவாய்ந்த பாகிஸ்தான் இராணுவம் நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகளில் ராணுவத்துக்கு எந்த பங்கும் இல்லை என கூறிவிட்டது. இதுகுறித்துப் பேசிய பாக் இராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், "அரசியல் தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும் ராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை." என தெளிவுபடுத்தியுள்ளார்.

திடீர் திருப்பம்
சட்டசபை கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், தேசிய சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளும் நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என்று கூறினார். இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக , இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

பதவியில் இல்லை
"பாகிஸ்தான் ஜனாதிபதியால் பாகிஸ்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக, 3 ஏப்ரல் 2022 தேதியிட்ட பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் மூலம், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் 48(1) வது பிரிவுடன் 58(1) இன் படி , திரு இம்ரான் அஹ்மத் கான் நியாசி, பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நிறுத்தி வைக்கப்படுகிறார் " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி சட்டமன்றத்தை கலைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பாகிஸ்தான் பிரதமரும் முழுமையாக பதவியில் நீடித்ததில்லை என்ற நிலையில், இம்ரானும் பதவியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications