மோசமாகும் பாகிஸ்தான் நிலைமை.. இனி ஒன்றுமே செய்ய முடியாது.. இந்தியா அடித்த பெரிய ‛ஆப்பு’
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் கிடைக்காமல் போய் உள்ளது. பாகிஸ்தானில் அங்கு காரீப் பருவகாலம் தொடங்கி உள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர்.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுது்து பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. அதன்படி பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

கடந்த 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் நம் நாடும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இதன்மூலம் சிந்து நதி நீரால் பாகிஸ்தானில் விவசாயம் செழித்தது. மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானதோடு, நீரில் இருந்து மின் உற்பத்தியும் தயாரிக்கப்பட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 22 கோடி பேர் சிந்து நதி நீரை நம்பி இருந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் மெல்ல பாதிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சிந்து நதி நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜூன் இரண்டாம் வாரம் வரையிலான காரீஃப் பருவத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 21 சதவீத நீர் பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் இன்னும் 2 வாரங்கள் வரை பாகிஸ்தானில் வெப்பம் என்பது அதிகரிக்க உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தானிலும் வெப்ப அலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இயல்பை விட ஆறு டிகிரி அதிகமாக வெப்பநிலையை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிந்து மாகாணத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு கூடுதல் தலைவலியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து நதி அமைப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, ஜூன் 5 ஆம் தேதி சிந்து நதிப் படுகையிலிருந்து அணைகளுக்கு 124,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இது கடந்த ஆண்டில் 144,000 கனஅடி நீராக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தானில் காரீப் பருவ காலம் தொடங்கி உள்ளது. இந்தியாவின் தண்ணீர் நிறுத்தத்தால் அந்த காரீப் பருவ சாகுபடி பெரியளவில் பாதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏகே பஜாஜ் கூறுகையில், ‛‛பாகிஸ்தானில் சிந்து நதி அமைப்புடன் இணைக்கப்பட்ட ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குறைவான நீர் உள்ளது. இதனால் விவசாயிகள் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள உள்ளனர். காரீப் பயிர்களை விதைக்கும் பணி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. சிந்து நதி நீர் இல்லாவிட்டால் இந்த பருவ சாகுபடி பெரிதும் பாதிக்கப்படும்.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பருவமழை என்பது ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தான் தொடங்கும். இதனால் அதுவரை பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும்'' என்றார்.
-
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications