அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி வாங்கி.. ஹோட்டலில் 10 ரூபாய்க்கு விற்பனை.. நூதன மோசடி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஏழை மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் அம்மா உணவகம் தவெக ஆட்சியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பெரிய அளவில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு அருகே செயல்படும் அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள், மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அரசு மானியத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகள், வெளியே உள்ள ஹோட்டல்களில் 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இதனால் ஏழை மக்களும் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amma Unavagam Idlis Sold to Hotels

அம்மா உணவகத்தில் இட்லி மொத்த விற்பனை?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்துக்கு அருகே உள்ள அம்மா உணவகத்தில், காலை நேரத்தில் தயாராகும் இட்லிகள் மொத்தமாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகளை ஹோட்டல் உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, வெளியே 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் இதனால் உண்மையான பயனாளிகள் இட்லி கிடைக்காமல் திரும்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த உணவகத்தில் காலை 7:30 மணிக்குள் சுமார் 1200 இட்லிகள் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும், அதன் பிறகு வருபவர்களுக்கு இட்லி இல்லை என்று சொல்லப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 7:30க்குள் 1200 இட்லி காலியாகிறதா?

அம்மா உணவகம் காலை 7 மணிக்கு திறக்கப்படும் நிலையில், 7:30 மணிக்குள் இட்லிகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்துவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், காலை உணவுக்கு வரும் ஏழை எளிய மக்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் ஏமாற்றமடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த உணவகம் ஏழை மக்களின் பயன்பாட்டுக்காக அரசு மானியத்துடன் இயங்கும் நிலையில், இங்கு தயாராகும் இட்லிகள் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்கப்படுவது, அரசின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏழை மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிப்பு

ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் ஏழை குடும்பங்களும், காலை உணவு இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பலர் காலை 7:30 மணிக்கு மேல் வந்தால் இட்லி கிடைக்காமல் திரும்பிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்வதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தப் புகார் குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மை தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மானியத்தில் இயங்கும் அம்மா உணவகங்கள், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் புகார் தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+