தலிபான்களுடன் பேச்சு- ஆப்கானை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு தளமாக்கக் கூடாது: ஜெய்சங்கர்
தோஹா: கத்தாரின் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் குறிப்பிட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே யுத்தம் நீடித்தும் வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா படைகளும் உதவின. தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதற்காக இருதரப்பும் கைதிகளை விடுதலை செய்திருந்தன.

தோஹாவில் அமைதி பேச்சு
இதனிடையே கத்தாரின் தோஹா நகரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆப்கான் புலனாய்வு பிரிவு முன்னாள் தலைவர் மஸ்தும்பங், தலிபான்களின் தலைமை நீதிபதி மெளலவி அப்துல் ஹக்கீம் ஆகியோர் தலைமையில் இருதரப்பு குழுக்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன. ஆப்கான் மற்றும் தலிபான் குழுவினர் திங்கள்கிழமை முதல் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
இன்றைய தொடக்க நாளில் ஆப்கானிஸ்தானின் தேசிய மறுசீரமைப்பு உயர்நிலைக் குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா, தலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பர்தார், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் சிறப்புரையாற்றினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்.

ஆப்கானுக்கான பேச்சுவார்த்தைகள்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமது உரையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தான் தலைமையில் ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவுக்கு எதிரான தளமாக்க கூடாது
சிறுபான்மையினர், பெண்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானின் அத்தனை பகுதிகளிலும் இந்தியாவின் 400க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை ஒருபோதும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான தளமாக பயன்படுத்த அனுமதிக் கூடாது என்பது எங்களது எதிர்பார்ப்பு என்றார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications