7 மாத காத்திருப்பு.. ஒரே ஒரு பயணிக்காக.. மச்சு பிச்சுவை திறந்து விட்ட பெரு.. பெரிய மனசுதான்!
லிமா: ஒரேயொரு ஜப்பான் பயணிக்காக உலக பாரம்பரிய சின்னமான மச்சு பிச்சை திறந்துள்ளது பெரு அரசு.
பெரு நாட்டில் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருபாம்பா பள்ளத்தாக்கின் மலைத்தொடரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் மச்சு பிச்சு. கி.பி.1450-ல் இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்நகரம் புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று.

மச்சு பிச்சுவை கடந்த 1983ம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ. கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மச்சு பிச்சுவுக்கு நாள்தோறும் 3000 பார்வையாளர்கள் வருகை தந்து வந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் மச்சு பிச்சுவுக்கு செல்ல பெரு அரசு தடைவிதித்திருந்தது. இதனால் கடந்த ஏழு மாதங்களாக மச்சு பிச்சு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரேயொரு ஜப்பான் பயணிக்காக மச்சு பிச்சை பெரு அரசு திறந்துள்ளது. மச்சு பிச்சுவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த மார்ச் பெரு வந்தார் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெஸ்சி டாகயாமா. ஆனால் கொரோனா பிரச்சினையால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு விட்டதால் அவரால் மச்சு பிச்சு செல்ல முடியவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த டாகயாமா மச்சு பிச்சுவை பார்த்து விட்டுதான் ஜப்பான் திரும்ப வேண்டும் என முடிவு செய்து பெருவிலேயே தங்கிவிட்டார். ஏழு மாதங்களுக்கு பிறகு அவரது கோரிக்கை ஏற்றுக்கொண்ட பெரு அரசு, அவர் ஒருத்தருக்காக மட்டும் மச்சு பிச்சுவை திறக்க அனுமதித்தது.
இதையடுத்து டகாயாமா தனி ஒருத்தராக மச்சு பிச்சுவை ஆசைத்தீர சுற்றிப்பார்த்துவிட்டு தாய்நாடு திரும்பி இருக்கிறார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த மாதம் முதல் மச்சு பிச்சு திறக்கப்படும் என பெரு அரசு அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications