பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணத்துக்கு எதிராக லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அதிகாரிகள் ராஜ்ய ரீதியிலான அனுமதியின்றி பாகிஸ்தானுக்குள் வந்ததாகக் கூறி லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் கடந்த 25 ஆம் தேதி எதிர்பாராத வகையில் திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்றார். அவருடன் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவும் சென்றது.

லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசிய மோடி, நவாஸ் ஷெரீப்பின் பேத்திக்கு திருமண வாழ்த்து கூறியதுடன், பரிசுப் பொருளையும் வழங்கினார். காங்கிரஸ் கட்சி இதனை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், மோடியின் ராஜதந்திரத்தையே பாகிஸ்தான் பயணம் காட்டுவதாக பாஜக கூறியது. இந்த பயணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த போதிலும், சில சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில் மோடியின் பயணுத்துக்கு எதிராக லாகூர் நீதிமன்றத்தில் முனிர் அகமது என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜ்ய ரீதியிலான அனுமதியின்றி மோடி பாகிஸ்தானுக்கு வந்ததாகவும், அவரது வருகை சமூக வலைதளங்கள் வாயிலாகவே பரிமாறப்பட்டது. மோடியின் பயணத்தில் சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு விமான போக்குவரத்துறை அமைச்சகமும், விமான நிலைய பாதுகாப்புப்படை அதிகாரிகளும் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications