கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் பிரான்சிஸ்
வாடிகன்: கேரளா கன்னியாஸ்திரி மறைந்த மரியம் திரேசியாவுக்கு இன்று வாடிகன் நகரில் இன்று புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.
கேரளாவின் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்த மரியம் திரேசியா, 1914ல் அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை உருவாக்கினார். இந்த சகோதரிகள் சபை மூலம் ஏராளமான ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
1926-ம் ஆண்டு தமது 50-வது வயதில் மரியம் திரேசியா காலமானார். அவரது மனிதநேய சேவையைப் பாராட்டும் வகையில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

வாடிகனில் புனிதர் பட்டம்
வாடிகன் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தலைமையிலான குழு பங்கேற்றது.

2000-ல் அருளாளர் பட்டம்
முன்னதாக 2000-ம் ஆண்டு மரியம் திரேசியாவுக்கு அருளாளர் என்ற பட்டத்தை அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் வழங்கியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் செப்டம்பர் 29-ல் தமது வானொலி உரையில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

கேரளாவுக்கு 4வதாக புனிதர் பட்டம்
கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அல்போன்சா, சகோதரி எவுப்ராசியம்மா, அருட்தந்தை குரியக்கோஸ் எலியாஸ் சவாரா ஆகியோருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4-வதாக கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

2 அற்புதங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் புனிதராக ஒருவர் அங்கீகரிக்கப்படுவதற்கு 2 அற்புதங்கள் செய்திருக்க வேண்டும். மேத்யூ பெல்லிச்சேரி என்ற நபரும், கிறிஸ்டோபர் என்ற குழந்தைக்கும் நோய்களை குணமளித்தார் என்ற அடிப்படையில் மரியம் திரேசியாவுக்கு தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications