விண்கல் மோதி டைனோசர்கள் அழிந்ததா? மறுக்கும் ஆய்வாளர்கள்! மனிதர்களுக்கும் இது நடக்குமா!
லண்டன்: விண்கல் மோதிதான் டைனோசர்கள் அழிந்தன என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விஞ்ஞானிகளும் இதைத்தான் நம்புகின்றனர். ஆனால் டைனோசர்கள் விண்கல் மோதலுக்கு முன்னரே அழிய தொடங்கியது என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
இந்த அழிவுக்கு காரணம் என்ன? மற்ற உயிர்களை போலவே மனிதர்களும் இதுபோன்று அழிவை எதிர்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்னர் சுமார் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் படிமங்களை இந்த ஆய்வுக்கு அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார். இப்படியான படிமங்கள் நிறைய வடஅமெரிக்காவில்தான் கிடைத்தது. ஆய்வில், 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் பரவலாக வாழ்ந்ததாகவும், 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை குறைய தொடங்கின என்றும் தெரிய வந்திருக்கிறது.
அப்படியெனில் அந்த டைனோசர்களுக்கு என்ன நடந்தது? அது அழிந்து போக காரணம் என்ன? நம்மிடம் இதற்கான பதில் இருக்கிறதா? இவ்வளவு பெரிய உயிர் தடம் தெரியாமல் அழிந்து போகுமா? மனிதர்களுக்கும் இது போன்று நடக்குமா என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கால வரிசையில் நாம் இதை புரிந்துக்கொள்வோம்.
கி.மு 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் செழிப்பாக இருந்தன
கி.மு 7.5 -7.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் குறைந்தன
கி.மு 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்கல் மோதியது
இந்த தாக்குதல் நடந்த பின்னர்தான் பூமியில் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம் என்பதுதான் இப்போது கேள்வி. இப்போதுள்ள மெக்சிகோ பகுதியில் விண்கல் விழுந்திருந்தது. இப்போதும் கூட அந்த பகுதியில் 180 கி.மீ அகலத்திற்கு பெரிய பள்ளம் இருக்கிறது. விண்கல் மோதியதால்தல் எரிமலை வெடிப்பும், நிலநடுக்கங்களும், காட்டு தீயும் ஏற்பட்டிருக்கிறது. அது வளிமண்டலத்தை மூடி, தாவரங்கள் ஒளி சேர்க்கை செய்ய விடாமல் தடுத்திருக்கிறது.
இது சைவ உண்ணிகளை அழிக்க, சைவ உண்ணிகளை நம்பியிருந்த அசைவ உண்ணிகளும் அடுத்தடுத்து அழிய தொடங்கின. ஆக விண்கல் மோதலால்தான் டைனோசர்கள் அழிந்தததற்கு காரணம் என்று தெளிவாக தெரிகிறது. அப்புறம் எப்படி ஏறதாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிய தொடங்கிவிட்டன என ஆய்வாளர்கள் கூறினார்கள்? இதற்கான விடையையும் அதே ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதாவது 7.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோர்களின் படிமங்ககள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கின்றன. போதுமான படிமங்கள் கிடைக்காததால் ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
எது எப்படியோ மனிதர்கள் பாதுகாப்பாக இருந்தால் சரி. ஆனால் மனித அழிவும் கூட விண்கல் மோதலால்தான் ஏற்படுமாம். உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications