அமெரிக்க ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் இந்தியப் பெண் ஷாமா சவந்த்
வாஷிங்டன்: அமெரிக்க ஊழியர்களுக்கு தொழில் நிறுவனரான பெண்மணி ஒருவர் இருப்பதிலேயே அதிகமான சம்பளத்தை வழங்கி வருகின்றார்.அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
அமெரிக்க வாழ் இந்தியரான ஷாமா சவந்த் துறைமுக நகரமான சியாட்டில் நகரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 15 அமெரிக்க டாலர்கள் என்ற வீதத்தில் சம்பளத்தை சவந்த் வழங்கி வருகிறார்.அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 899 மற்றும் ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் ஆகின்றது.
இதுவே அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்த ஷாமா சவந்த் கடந்த நவம்பரில் நடைபெற்ற சியாட்டில் சிட்டி கவுன்சில் தேர்தலில் சோசியலிஸ்ட் ஆல்டர்னேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் இதுபற்றி கூறும்போது, "இந்த 15 டாலர் என்பது குறைந்தபட்ச அளவீடுதான்.உற்பத்தியைப் பொறுத்து ஊழியர்களுக்கு மேலும் அதிக சம்பளம் கொடுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.