வைரஸை கொல்லும் முகக் கவசங்களை அறிமுகப்படுத்தியது சீனா.. புதிய டெக்னாலஜி.. சிறப்பம்சங்கள் என்ன?
பெய்ஜிங்: சீனாவில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர்பலியை அதிகரித்து ஏற்படுத்தி வருகிறது.
சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 3000-ஐ தாண்டியது. மொத்தம் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அந்தந்த நாடுகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு தடை விதித்துள்ளது.

மக்கள்
இந்த நிலையில் மாஸ்க் எனப்படும் முகக் கவசம் அணிவதால் வைரஸ் கிருமியுள்ள காற்றை நாம் சுவாசிப்பதிலிருந்து தடுக்கப்படும். இதனால் பல்வேறு நாடுகளில் முகக் கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் முகக் கவசத்தின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் முகக் கவசம் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கொல்லப்படும்
ஒரு நாளைக்கு ஒரு முகக் கவசம் என பயன்படுத்துவதால் அதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 7 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய நானோ சில்வர் முகக் கவசங்களை ஜூஹாயை சேர்ந்த அன்ஸின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கவசத்தை அணியும் போது அதிலுள்ள நானோ சில்வர் துகள்கள் வெளியிடும் அயனிகளால் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் கொல்லப்படுவதாக அன்ஸின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாக்டீரியா
இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரி கூறுகையில் தற்போது நாங்கள் இரு முகக் கவசங்களை மட்டும் இறக்குமதி செய்கிறோம். ஏப்ரல் அல்லது மே மாதம் இவை பரவலாக கிடைக்கும். அந்த நேரம் இது போன்ற சூழல் நிலவாமல் கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விடும் என கருதுகிறோம். ஹாங்காங்கில் உள்ள முக்கிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் நானோ சில்வர் மாஸ்க் பாக்டீரியாவை கொல்லும் தன்மை கொண்டது என்றனர்.

தண்ணீர்
அதோடு மாஸ்கில் தண்ணீரை உறிஞ்சும்படியாக மூச்சுவிடும்போது ஈரப்பதமான காற்று கிடைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறோம். 8 மணி நேர பயன்பாட்டிற்கு பிறகு இந்த மாஸ்கை சோதனை செய்ததில் மற்ற மாஸ்க்களை காட்டிலும் மிகவும் குறைவான கிருமிகளே காணப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய் வரும் போதும் இது போல் மாஸ்க் தயாரிக்க முயற்சித்தோம். ஆனால் உள்ளூர் அதிகாரிகளின் ஆதரவுடன் தற்போதுதான் அந்த பணி முடிவடைந்துள்ளது. மாஸ்கை போடும் போது சேதாரமோ கிழிந்திருத்தலோ கூடாது. நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் மாஸ்க்களை உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications