உக்ரைனில் கீவ்,சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் 4 நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மாஸ்கோ: உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. போரை நிறுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இந்நிலையில், கடந்த 12 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்திவந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் பல நகரங்களில் விடிய விடிய குண்டு மழை பொழிந்து தாக்கி வருகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளதாக தகவல் வெளியான நிலையில்
பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப்பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது. இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 12 நாட்கள் நடைபெற்ற போரினால் இதுவரை 1.45 மில்லியன் மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடப்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி, 7,87,300 அகதிகள் போலந்துக்கும், 228,700 பேர் மால்டோவாவிற்கும், 144,700 பேர் ஹங்கேரிக்கும், 132,600 பேர் ருமேனியாவிற்கும் 100,500 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றுள்ளனர். உக்ரைனில் குறைந்தது 351 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன
இந்த சூழ்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி டேவிட் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications