உலகின் முதல் சோலார் நகரம்.. கலிபோர்னியாவில் அனைத்து வீடுகளுக்கும் சோலார் கட்டாயம்!
கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க தற்போது மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. முக்கியமாக மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் முறைகளால் மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் சோலார் பவர் மூலம் மின்சாரம் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்படியாக கலிபோர்னியாவில் சோலார் திட்டம் பெரிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளது.

கட்டாயம்
இந்த திட்டத்தின் படி இனி கலிபோர்னியாவில் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் கட்டாயமாக சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுதான் கட்டப்பட வேண்டும். அதன்படி வீடு கட்ட அனுமதி வாங்கும் போது, சோலார் பேனல்கள் எப்படி பொருத்தப்படும் என்று கட்டிடத்தின் வடிவமைப்பை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே இந்த புதிய வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும்
அதேபோல் இந்த திட்டம் 2020க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது. 2020 வரை சோலார் பேனல்கள் இல்லாத வீடுகள் கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி அந்த வீடுகள் மொத்தமாக கணக்கெடுக்கப்பட்டு அதில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது. உலகிலேயே எல்லா வீடுகளுக்கும் சோலார் பேனல்களை கட்டாயமாக்கிய பகுதி இனி கலிபோர்னியாவாக மட்டுமே இருக்கும்.

அதிக செலவு
ஒரு நபர் வசிக்க கூடிய சிறிய வீடாக இருந்தாலும் அதில் சோலார் பேனல்கள் வைக்க வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல சோலார் பேனல்கள் வைக்க வேண்டும் என்று அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு 1 லட்சம் வரை அதிகம் செலவாகும். ஆனால் எதிர்கால மின்சார தேவைகளை பார்க்கும் போது இந்த செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரிய சாதனை
தற்போது 2020 வரை இவர்கள் இலக்கு நிர்ணயித்து வேலை பார்க்கிறார்கள். எல்லா வீடுகளுக்கும் 2025க்குள் எப்படியும் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுவிடும் என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இப்போது அந்த மாகாணத்தில் 16 சதவிகித மின்சார தேவையை சோலார் மின்சாரம்தான் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டம் சரியாக கடைபிடிக்கப்பட்டால், 95 சதவிகித மின்சார தேவையை கண்டிப்பாக இந்த சோலார் திட்டம் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications