உலகின் முதல் சோலார் நகரம்.. கலிபோர்னியாவில் அனைத்து வீடுகளுக்கும் சோலார் கட்டாயம்!
கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க தற்போது மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. முக்கியமாக மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் முறைகளால் மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் சோலார் பவர் மூலம் மின்சாரம் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்படியாக கலிபோர்னியாவில் சோலார் திட்டம் பெரிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளது.

கட்டாயம்
இந்த திட்டத்தின் படி இனி கலிபோர்னியாவில் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் கட்டாயமாக சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுதான் கட்டப்பட வேண்டும். அதன்படி வீடு கட்ட அனுமதி வாங்கும் போது, சோலார் பேனல்கள் எப்படி பொருத்தப்படும் என்று கட்டிடத்தின் வடிவமைப்பை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே இந்த புதிய வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும்
அதேபோல் இந்த திட்டம் 2020க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது. 2020 வரை சோலார் பேனல்கள் இல்லாத வீடுகள் கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி அந்த வீடுகள் மொத்தமாக கணக்கெடுக்கப்பட்டு அதில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது. உலகிலேயே எல்லா வீடுகளுக்கும் சோலார் பேனல்களை கட்டாயமாக்கிய பகுதி இனி கலிபோர்னியாவாக மட்டுமே இருக்கும்.

அதிக செலவு
ஒரு நபர் வசிக்க கூடிய சிறிய வீடாக இருந்தாலும் அதில் சோலார் பேனல்கள் வைக்க வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல சோலார் பேனல்கள் வைக்க வேண்டும் என்று அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு 1 லட்சம் வரை அதிகம் செலவாகும். ஆனால் எதிர்கால மின்சார தேவைகளை பார்க்கும் போது இந்த செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரிய சாதனை
தற்போது 2020 வரை இவர்கள் இலக்கு நிர்ணயித்து வேலை பார்க்கிறார்கள். எல்லா வீடுகளுக்கும் 2025க்குள் எப்படியும் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுவிடும் என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இப்போது அந்த மாகாணத்தில் 16 சதவிகித மின்சார தேவையை சோலார் மின்சாரம்தான் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டம் சரியாக கடைபிடிக்கப்பட்டால், 95 சதவிகித மின்சார தேவையை கண்டிப்பாக இந்த சோலார் திட்டம் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications