For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்காவில் வீசிய கடும் புயல்: 35 பேர் சாவு
வாஷிங்டன்:அமெரிக்காவில் வீசிய புயலில் சிக்கி 35பேர் உயிரிழந்தனர், பல இடங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் திங்கள்கிழமை வீசிய புயலில் சிக்கி 35பேர் உயிரிழந்துள்ளனர். மிஸ்சிசிபி, அல்பானா ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
புளோரிடா, ஜார்ஜியா மாகாணங்களிலும் புயலின் தாக்கத்தை மக்கள் உணர்ந்தனர்.
புயல் தாக்கிய பகுதிகளில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் 10ஆயிரத்துக்கும் அதிக மக்கள் மின்சாரம் இன்றி தவித்துவருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருவதாக மிஸ்சிசிபி பேரிடர் மீட்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
English summary
As severe storms swept across South and Central America, at least 35 people were left dead and tens of thousands remained without power even as forecasters downgraded the threat to the eastern half of US.
Story first published: Wednesday, April 30, 2014, 12:36 [IST]