கடலுக்கு போய், மீன் கிட்ட பேசி நம்ம வழிக்கு கொண்டுவரும்.. அசத்தும் ரோபோ கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.
ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது. ஜெனிவாவில் இருக்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறது.
இந்த ரோபோட் மீன்களிடம் பேசம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மீன்களை திசை மாற்றவும் இந்த ரோபோட்கள் உதவும்.
இதை உருவாக்க ஐந்து வருடத்திற்கும் அதிமாக ஆகியதாக சுவிட்சர்லாந்த் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரோபோட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

மீன்கார ரோபோட்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'எல்.எஸ்.ஆர்.ஓ' என்ற நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிரமாக மீன் பிடிக்கும் ரோபோட் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. கடல் சார்ந்த ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம்
அதிகம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கும் உதவவும் ஒரு ரோபோட் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது

ரோபோட் பழக்கப்படுத்தப்பட்ட விதம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த ரோபோட்டை முழுமையாக வடிவமைத்து அந்த நிறுவனம் சாதனை புரிந்தது. இந்த ரோபோட் கடந்த சில மாதங்களாக தண்ணீருக்குள் விட்டு அதோடு கடல்குதிரை மீனையும் அந்த தண்ணீரில் விட்டு சோதனை செய்தனர். இந்த சோதனை தினமும் செய்யப்பட்டது. ஆர்டிபிசியால் இண்டலிஜென்ஸ் மூலம் இயங்கும் அந்த ரோபோட் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மீனின் குணங்களை படிக்க ஆரம்பித்தது.

எந்த மாதிரி செயல்படும்
இந்த ரோபோட் மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே இருக்கும். மீன்களை மிகவும் எளிதில் ஏமாற்றும் வகையில் அந்த ரோபோட் இருக்கும். மேலும் அதில் இருக்கும் சோலார் மின்சாரம் மூலம் இயங்கக் கூடிய மோட்டார்கள் மீன்களை போல அவற்றை நீந்த வைக்கும். மேலும் அதில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் நமக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும்.

இந்த ரோபோட் கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவலைகளை மீன்களுக்கு புரியும்படி மாற்றிக் கொடுக்கும். மேலும் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் இந்த ரோபோட்களால் முடியும். இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ரோபோட் கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவலைகளை மீன்களுக்கு புரியும்படி மாற்றிக் கொடுக்கும். மேலும் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் இந்த ரோபோட்களால் முடியும். இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications