வேகமாக முன்னேறும் தலீபான்கள்.. ஹெராட் போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றினர்.. அடிபணியும் ராணுவம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ் தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டு தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கி வந்த அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்டது.
இதன்பின்னர் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நினைத்தபடியே ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி உள்ளனர்.

தலிபான்கள் ஆதிக்கம்
பல்வேறு முக்கிய மாகாணங்களையும் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளனர் பயங்கரவாதிகள். 9 மாகாண தலைநகரங்கள்,விமான நிலையங்கள் 290க்கும் அதிகமான மாவட்டங்களில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் காபூலை முக்கிய இலக்காக வைத்துள்ள தலீபான்கள் அதனை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.

போலீஸ் தலைமையகம்
தலைநகர் காபூலுக்கு அருகே அமைந்துள்ள மாகாணங்களை எல்லாம் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளன வந்துள்ளனர். தற்போது காபூலில் இருந்து 150 கி.மீ தொலைவே இருக்கும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான கஸ்னியை கைப்பற்றினார்கள். இந்த நிலையில் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் போலீஸ் தலைமையகத்தை தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

ஹெராட் விமான நிலையம்
கஸ்னி மாகாணத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள் ஆப்கான் படைகளை முறியடித்து விட்டு ஹெராட்டுக்குள் நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைபற்றியுள்ளனர். இதனால் ஹெராட் விமான நிலையத்தில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கஸ்னியை கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரை நாட்டின் தென் மாகாணங்களுடன் இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையை தலீபான்கள் துண்டிக்கிறனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அவரசமாக அழைப்பு விடுத்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications