"தலை" துண்டாகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்! லிப்டில் போகும்போது இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க
மாஸ்கோ: லிப்ட்டை நாம் ஏன் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி
நமது அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. அதேநேரம் அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவில்லை என்றால் அது ஆபத்திலும் முடிய வாய்ப்பு உள்ள.
இதனிடையே ரஷ்யாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் லிப்ட்டினால் எந்தளவு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்யா
அந்த மனிதர் சற்றே தாமதித்து இருந்தாலும் கூட அவரது தலை மிக எளிதாகத் தூண்டாகி இருக்கும். ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்தச் சம்பவம் நடப்பதிற்கு சில வாரங்களுக்கு முன்னதாக தான், லிப்ட்டில் பிரச்சினை இருப்பதாகவும் திடீரென அது உள்ளே குலுங்குவதாகவும் சிலர் புகார் அளித்து இருந்தனர். சில வாரங்களில் இப்போது மீண்டும் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

வீடியோ
அந்த வீடியோவில், லிப்டில் இருந்து ஒருவர் வெளியே செல்கிறார். இதையடுத்து மொபைலை பார்த்தவாறு, மற்றொரு நபர் லிப்டில் நுழைய முயல்கிறார். அப்போது திடீரென வகையில் லிப்ட் மூட ஆரம்பிக்கிறது. மொபைலை பார்த்தவாறு வந்ததால் அவரும் இதை முதலில் கவனிக்கவில்லை. முதலில் அந்த நபர் மூடும் கதவைத் தடுக்க முயல்கிறார்.

ஜஸ்ட் மிஸ்
அதேநேரம் லிப்ட் திடீரென மேலேயும் செல்ல தொடங்குகிறது. அந்த நபரின் காலும் கூட லிப்டில் மாற்றிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் லிப்டில் இருந்து அப்படியே பின்னால் சென்று விடுகிறார். இதன் மூலம் நூலிழையில் தப்பித்து உள்ளது. சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் அந்த நபர் துண்டாகி இருப்பார்.

கருத்து
மொத்தம் 9 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. லிப்ட், எஸ்கிலேட்டர் உள்ளிட்டவற்றை நாம் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த நபர் எப்படியோ தப்பித்துவிட்டார், அதேநேரம் குழந்தைகள் யாராவது அதில் சிக்கியிருந்தால் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரஷ்யா கட்டுமானம்
அதேநேரம் இதுபோன்ற மோசமான நிலையில் கருவிகள் உள்ளது ரஷ்யாவில் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ரஷ்யாவில் பல இடங்களில் இருக்கும் கட்டிடங்கள், இயந்திரங்கள் மிக மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. அங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் சோவியத் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இதுபோன்ற விபத்துகள் அங்குத் தொடர்ந்து நடந்து வருகிறது.

லிப்ட் சம்பவங்கள்
சமீபத்தில் இதேபோலத் தான் பிரிட்டன் நாட்டிலும் லிப்ட் சம்பவம் செய்தது. அங்கு போர்ட்ஸ்மவுத்தில் உள்ள விக்டரி பிசினஸ் சென்டரில் பாராலீகல் அஜிசுல் ரேஹான் என்பவர் லிப்டில் மாட்டிக் கொண்டார். எதோ ஒரு சில நிமிடங்கள் இல்லை. பாண்டியராஜன் திரைப்படத்தில் வருவது போல இரவு முழுவதும் அங்கு அவர் சிக்கிக் கொண்டார். கடும் போராட்டத்திற்குப் பின், காலை 7 மணிக்குத்தான் அவர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications