இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியா
வாஷிங்டன்: அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு மக்கள் பலர் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த நாட்டின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகும் ஏழாவது நாடு சிரியாவாகும்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை அமெரிக்க துரிதப்படுத்தியது.
இதன் ஒருபகுதியாக அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்று பழி தீர்த்தது அமெரிக்கா. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதம் எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா தலையிட்டு விமானப்படை மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் இன்று முதன்முறையாக தனது விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியாவாகும்.
முன்னதாக ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விமானப்படை மூலமாகவும், சோமாலியா, ஏமன், பாகிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாகவும் அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. அதிலும் ஈராக்கில் அடுத்தடுத்த நான்கு அதிபர்களால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பதவியேற்ற அனைத்து அதிபர்களுமே, ஈராக்கில் தாக்குதல் நடத்தியபடியே உள்ளனர். அதில் நான்காவது அதிபர்தான் ஒபாமாவாகும்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications