நியூயார்க்கில் முஸ்லீம்களை கொல்ல திட்டமிட்ட கிறிஸ்தவ பாதிரியார் மட்டும் ஸ்பெஷலா?
நியூயார்க்: நியூயார்க்கில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த முஸ்லீம்களை கொலை செய்ய திட்டமிட்ட கிறிஸ்தவ பாதிரியார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் விரைவில் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.
அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான ராபர்ட் டக்கார்ட். அவர் நியூயார்க்கில் பெனிசில்வேனியா எல்லையோரம் வசித்து வரும் சுமார் 200 கருப்பினத்து முஸ்லீம்களை கொலை செய்ய திட்டமிட்டார். அவர் ஒரு எப்.பி.ஐ. உளவாளியை சந்தித்து அவரிடம் அந்த முஸ்லீம்களை கொல்ல தான் எவ்வாறு வெடிகுண்டை தயாரிக்கப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.
மேலும் ராபர்ட் முஸ்லீம்களை தாக்கும் திட்டம் மற்றும் அதற்காக தான் வைத்திருந்த எம்-4 ராணுவ துப்பாக்கியையும் அவரிடம் காண்பித்துள்ளார். அந்த முஸ்லீம்களால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்று நினைத்த ராபர்ட் அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார். கடவுள் மீது தான் வைத்திருக்கும் அன்பை இந்த தாக்குதல் நிரூபிக்கும் என்று அவர் நினைத்தார்.
அந்த 200 முஸ்லீம்களை கொன்று அவர்களின் உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டுமாறு அவர் தனது ஆதரவாளர்களிடமும் தெரிவித்துள்ளார். நல்லவேளையாக அவர் தாக்குதலை நடத்தும் முன்பு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரால் யாருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை என அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
முஸ்லீம்களை கொல்லத் திட்டமிட்ட பாதிரியார் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications