ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! கடற்கரையில் இருக்கும் அணுமின் நிலையத்தின் நிலை என்ன? அரசு விளக்கம்
டோக்கியோ: ஜப்பானில் ரிக்டர் அளவில் 7.4 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் மேற்கு கடற்கரையை சுனாமி தாக்கியிருக்கிறது. இங்கு அணுமின் நிலையம் இருப்பதால் பேராபத்து நிகழும் அபாயம் எழுந்திருக்கிறது.
ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 49 கி.மீ தொலைவில் கடலில் 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பான் கடற்கரையில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மட்டுமல்லாது, ரஷ்யாவின் சைபீரியா, வடக்கு சீனா, கொரிய தீபகற்பங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜப்பான் கடற்கரை பகுதிகளை சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளன. இங்கு அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, சுனாமியால் இது பாதிக்கப்படும் என்கிற அச்சம் மேலெழுந்தது. இதற்கு அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, சுனாமியால் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications