“தனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி..” பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்!
எதிர்பாராதவிதமாக பிலிப்பைன்ஸ் இளம்பெண் ஒருவருக்கு விமானத்தில் தனி ஆளாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, விமானத்தில் தனி ஆளாக பயணிக்கும் அதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக கிடைத்துள்ளது.
பெரும் கோடீஸ்வரர்கள் நினைத்த இடத்திற்கு தனி விமானத்தில் பறந்து செல்வதை அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக கேள்விப் பட்டிருப்போம். நாமும் அதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நம்மிள் பலருக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்வதே பெரும் கனவாக இருப்பவர்களுக்கு இத்தகைய ஆசைகள் எப்போதும் எட்டாக்கனிகள் தான்.
ஆனால், எதிர்பாராதவிதமாக இத்தகைய அதிர்ஷ்டம் ஒருவருக்கு அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படியான தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

லுசியா:
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் லுசியா. இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி டவோவில் இருந்து மணிலாவிற்கு விமானத்தில் செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளார். அன்றைய தினம் விமானத்தில் ஏறியவருக்கு பெரும் இன்பதிர்ச்சி.

ராஜ உபச்சாரம்:
காரணம் விமானத்தில் அவரைத் தவிர வேறு பயணிகளே இல்லை. லுசியாவும் விமான ஊழியர்களும் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர். இதனால் அப்பயணம் முழுவதும் தனியொரு பயணியாக, விமான ஊழியர்களின் ராஜ உபச்சாரத்தோடு பயணம் செய்திருக்கிறார் லுசியா.
கொடுத்து வைத்தவர்:
இது தொடர்பான புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ‘இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடாது. இந்த மாதிரியான பயணத்திற்கு நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என லுசியாவின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்திற்கும் பாராட்டு:
அதோடு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரே ஒரு பயணி மட்டுமே அந்த விமானத்தில் பறக்க இருக்கிறார் என்பது தெரிந்தும், அவர்கள் விமானத்தை இயக்கியதற்குத் தான் அந்தப் பாராட்டு. அவர்கள் நினைத்திருந்தால், லுசியா செலுத்திய விமானக் கட்டணத்தைவிட அதிக பணத்தை திருப்பிக் கொடுத்து, அவரது டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது அவரது டிக்கெட்டை வேறு விமானத்திலோ மாற்றி விட்டிருக்க முடியும்.

நெட்டிசன்கள் பாராட்டு:
தனி ஒரு பயணிக்காக ஒரு விமானத்தை இயக்கியதைவிட அது செலவு குறைந்ததாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் ஒரு பயணியாக இருந்தாலும், அவரை மதித்து அவரது பயணத்திற்காக விமான ஊழியர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி, சுகமான பயணம் மேற்கொள்ளச் செய்ததை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications