ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங்
தெஹ்ரான்: ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்த முறை தற்போது அமலுக்கு வந்திருப்பதாகவும், முற்றுகை பகுதிக்கு வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்றும் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் போட்டிருக்கும் பதிவு சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.

"ஈரானிய கடற்படையை சேர்ந்த மொத்தம் 158 கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, தற்போது கடலின் அடியில் மூழ்கிக் கிடக்கின்றன. வேகத் தாக்குதல் கப்பல்களை நாங்கள் தாக்காமல் விட்டிருக்கிறோம். அதனால் பெரிய அச்சுறுத்தல் கிடையாது.
இந்தக் கப்பல்களில் ஏதேனும் ஒன்று, எங்களின் 'கடல் முற்றுகை' பகுதிக்கு மிக அருகில் வந்தால்கூட, கடலில் படகுகள் மூலம் போதைப்பொருள் கடத்துவோருக்கு எதிராக நாங்கள் பயன்படுத்தும் அதே அழிப்பு முறையைப் பயன்படுத்தி, அவை உடனடியாக ஒழிக்கப்படும். அந்த நடவடிக்கை மிக விரைவானதாகவும், மிகக் கடுமையானதாகவும் இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
எந்தெந்த துறைமுகங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கின்றன?
பிரிட்டன் கடற்படை சார்ந்த UKMTO அமைப்பின் தகவலின்படி, 6 துறைமுகப்பகுதிகள் அமெரிக்காவால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன.
1. பண்டார் அபாஸ்
2. பண்டார் இமாம் கொமெய்னி
3. சபாஹர்
4. கார்க் தீவு
5. அசலுயே
6. பண்டார் ஜாஸ்க்
இதில் பண்டார் அபாஸ் என்பது, ஈரானின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய வணிக துறைமுகம். நாட்டின் பெரும்பாலான கடல்வழி வர்த்தகம் இதன் வழியாகவே நடக்கிறது.
பண்டார் இமாம் கொமெய்னி, தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யும் பகுதியாகும். சபாஹர் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. கார்தீவு துறைமுகம் ஈரானின் உயிர் நாடி ஆகும். இங்கிருந்துதான் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது.
அசலுயே என்பது, ஈரானின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றமதி தளமாகும். பண்டார் ஜாஸ்க், ஓமன் வளைகுடாவில் உள்ள முக்கியமான எண்ணெய் முனையமாகும்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள் -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications