தான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தானே கலைத்த டிரம்ப்
சட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார்.
அமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையம் சான்றிதழ் அளித்து வெளியிட்ட முடிவுகளில், டிரம்பை விட அவரது போட்டியாளர் ஹில்லாரி க்ளின்டன் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
"வரிசெலுத்துவோரின் பணத்தில், இந்த முடிவில்லாத சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக தேர்தல் ஒருங்கிணைப்பிற்கான ஆலோசனை கமிஷனை கலைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் மோசடி கமிஷனை அமைத்தது, இடது சார்புடைய வாக்காளர்களை ஒடுக்கும் சூழ்ச்சியென ஜனநாயகவாதிகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
- அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா?
- இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?
கடந்த தேர்தலில், மக்கள் அளித்த வாக்குகளில் ஹில்லாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த டிரம்ப், "சட்டவிரோதமாக வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளை நீக்கினால்" தாம்தான் அதிலும் வெற்றி பெற்று இருப்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோத வாக்குகள் குறித்த கருத்திற்கு எந்த ஆதாரமும் அவர் அளிக்கவில்லை.
டிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கூற்று, மாநில தேர்தல் அதிகாரிகளால் பலமுறை விவாதிக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அவரது பெயர்கள், முகவரி, மற்றும் அரசியல் தொடர்பு குறித்த தகவல்களை மோசடி கமிஷனுக்கு அளிக்க பல மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
பிற செய்திகள்
- வடகொரியாவும் ஒலிம்பிக் போட்டிகளும்
- இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக மாணவிகள் மீது தாக்குதல்
- அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி
- ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தது ஏன்? - ஸ்டாலின் பேட்டி
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!














Click it and Unblock the Notifications