சீனாவில் இருந்து வந்த 2 விமானம்.. என்னங்க இது?.. ஆபத்து.. சோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இருந்து இத்தாலிக்கு வந்த இரண்டு விமானங்களில் இருந்த பயணிகளை சோதனை செய்து பார்த்த இத்தாலி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

சீனாவில் கொரோனா கேஸ்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. சீனாவில் சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

 சீனா பாதிப்பு

சீனா பாதிப்பு

இதனால் சீனாவில் பரவுவது ஓமிக்ரான் வைரஸ்தான். ஆனால் ஓமிக்ரானிலேயே லேசாக மாற்றம் அடைந்த கிளை வகையான BA5.2 மற்றும் BF.7 சீனாவில் அதிகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் ஓமிக்ரானின் 130 வகையான கிளை வைரஸ்கள் பரவி வருகிறது. சீனா தற்போது தினசரி கொரோனா கேஸ் அப்டேட்களை வெளியிடுவதை நிறுத்துவிட்டது. இந்த ஓமிக்ரான் கிளை வைரஸ் சீனாவையே முடக்கி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் பரவும் இந்த அதிக அளவு கேஸ்களால் புதிய வகை கொரோனா உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட ஏரியாவிற்கு ஏரியா 1 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதற்கு காரணம் உள்ளது. ஜீரோ கோவிட் விதிகள் காரணமாக முதல் மூன்று அலைகளில் பலருக்கு கொரோனா ஏற்படவில்லை. அப்போது தப்பித்தவர்கள் யாருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி இல்லை.

இத்தாலி

இத்தாலி

இந்த நிலையில் சீனாவில் பரவும் கொரோனாவால் உலக நாடுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு விதி முறைகளை கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் கூட வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. இத்தாலி போன்ற நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பயணிகள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 2020ல் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி.

இத்தாலி கொரோனா

இத்தாலி கொரோனா

இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா கேஸ்கள் காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது . முக்கியமாக சுற்றுலா துறையை நம்பி இருக்கும் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் கொரோனா காரணமாக இத்தாலியில் பழைய மாதிரி நிலைமை ஏற்பட கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் நேற்று சீனாவில் இருந்து இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு வந்த இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் சோதனை செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதில் முதல் விமானத்தில் வந்த 92 பயணிகளில் 35 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். அதேபோல் இரண்டாவது விமானத்தில் 120 பயணிகளில் 62 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. என்ன வகையான கொரோனா இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா விமானம் போல இவர்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்த விமானத்தில் வந்த மற்றவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இரண்டு விமானத்தில் இத்தனை கொரோனா நோயாளிகள் வந்ததால் இத்தாலி அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இனி வரும் சீன விமானங்களை கடுமையாக சோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+