அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்வுக்கு 'நோ' சொன்ன பிரிட்டன்
லண்டன்: ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா அறிவித்துள்ள கப்பல் முற்றுகை நடவடிக்கையில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என இங்கிலாந்து அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா - இங்கிலாந்து இடையே உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏன் இங்கிலாந்து மறுத்தது.. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணிநேரமாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை முறிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முற்றுகையில் இங்கிலாந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் கப்பல் போக்குவரத்தில் சுதந்திரத்தையே விரும்புகிறோம். உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டியது அவசியம். பிரான்ஸ் போன்ற இதர நாடுகளுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவே நாங்கள் பணியாற்றி வருகிறோம்."
முன்னதாக, இங்கிலாந்து தனது கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இங்கிலாந்தோ அமெரிக்காவின் முற்றுகை திட்டத்தை விடுத்து, பிரான்ஸ் உடன் கூட்டணி அமைத்து மாற்று வழியில் செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் இதுபற்றிக் கூறுகையில், "அமெரிக்காவுடன் ஈரான் விவகாரத்தில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு உள்ளது உண்மைதான். இது ட்ரம்ப் நிர்வாகத்துடனான எங்கள் உறவில் சிறு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த முற்றுகைத் திட்டம் உலகிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் கடற்படை அதிகாரி ஜோ செஸ்டாக் எச்சரித்துள்ளார். "அமெரிக்கா இந்தப் போருக்குத் தயாராக இல்லை. ஒரே நாளில் நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான ஏவுகணைகளை நாம் பயன்படுத்திவிட்டோம். இழந்த ஏவுகணைகளை மீண்டும் நிரப்ப 2035-ம் ஆண்டு வரை ஆகும்" என அவர் கவலை தெரிவித்தார்.
-
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? பெசஸ்கியானுக்கு போனை போட்ட புதின்! பேசியது என்ன? -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்? -
அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள் -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி














Click it and Unblock the Notifications