போலந்துக்கு மாற்றப்பட்ட உக்ரைன் இந்திய தூதரகம்- புதிய உதவி எண்கள் அறிவிப்பு!
வார்சா: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்து தலைநகர் வார்சாவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களுக்கான புதிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தத்தளித்து போயினர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் சுமார் 22,500 பேர் ஆபரேஷன் கங்கா மூலம் தாயகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் 50 இந்தியர்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இவர்களில் 15 முதல் 20 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் இருந்து இந்திய தூதரகமானது போலந்து தலைநகர் வார்சாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. உக்ரைனின் கீவ் நகரில் செயல்பட்ட இந்திய தூதரகம் முதலில் லிவீவ் நகருக்கு மாற்றப்பட்டது. தற்பொது லிவீவ் நகரில் இருந்து போலந்து தலைநகர் வார்சாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. லிவீவ் நகரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் வார்சா நகரம் உள்ளது.
இதனிடையே உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தற்போது புதிய உதவி எண்களை இந்தியர்களுக்காக வெளியிட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் [email protected].
24X7 மணிநேர உதவி மற்றும் வாட்ஸ் அப் எண்கள் +380933559958, +919205209802 and +917428022564.
இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications