Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3ம் உலக போர் தொடங்கிடுச்சா? திடீரென ஐநா படைகள் மீதே இஸ்ரேல் தாக்குதல்.. உள்ளே வரும் உலக நாடுகள்?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே லெபனானில் உள்ள ஐநா பாதுகாப்புப் படை மீது திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தக்குதலில் ஐநா வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளது. ஐநா வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முதலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், இப்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

israel iran war iran israel

தீவிரமடையும் தாக்குதல்: ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் அந்த அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரானும் உள்ளே வந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரு தரப்பிற்கும் இடையே சமானத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. இருப்பினும், அதைக் கேட்காமல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

ஐநா படை மீது தாக்குதல்: இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் லெபனானில் உள்ள ஐநா தளத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள ஐநாவின் ப்ளூ ஹெல்மெட் தளத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இருவர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐநாவுக்கு சொந்தமான கட்டிடம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. போர் சமயங்களில் ஐநா கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். இதனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலும் ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேநேரம் ஹிஸ்புல்லா படைகள் அங்கு ஐநா கட்டிடத்திற்கு அருகில் இருந்து செயல்படுவதாகத் தகவல் கிடைத்ததாகவும் இதன் காரணமாகவே தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

உலக நாடுகள் கோபம்: இருப்பினும், இது உலக நாடுகளை ஆத்திரப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கையைப் போர்க் குற்றம் என்று இத்தாலி விமர்சித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் இஸ்ரேலில் தாக்குதலுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது..

லெபனானின் தெற்கு பகுதியில் ஐநா வீரர்கள் பலர் இருந்தனர். இங்கு ஹிஸ்புல்லா நடமாட்டம் இருப்பதால் வேறு இடத்திற்குச் செல்லுமாறு ஐநா அமைப்பை இஸ்ரேல் கடந்த வாரம் தான் கேட்டுக் கொண்டது. இருப்பினும், அதை ஏற்க ஐநா மறுத்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு லெபனானில் இப்போது சுமார் 10 ஆயிரம் ஐநா வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா சொல்வது என்ன: இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த பீரங்கி தாக்குதலில் தனது வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதை ஐநாவும் உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானின் நகுராவில் உள்ள யுனிஃபில் தலைமையகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாகவும் இதில் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஐநா வீரர்களுக்கு மோசமான காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையும் ஐநா உறுதி செய்துள்ளது.

ஐ.நா. படையின் ஜீன்-பியெர்ரே லக்ரோய்ஸ் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா அமைதிப்படை வீரர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அங்குள்ள வீரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+