ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரபடுத்தும் அமெரிக்கா, பிரான்ஸ்
வாஷிங்டன்: பாரீஸ் தாக்குதலை அடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 129 பேர் பலியாகினர், 352 பேர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஆஷ்டன் கார்டர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜான் ஈவ்ஸ் லீ டிரையன் ஆகியோர் இடையே தொலைபேசி மூலம் இறுதி செய்யப்பட்டது.
இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ராணுவங்கள் தீவிர நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து இரு நாடுகளும் கூட்டாக செயல்பட உள்ளன என்றார்.
பாரீஸ் தாக்குதல் குறித்த விசாரணையில் என்ன உதவி வேண்டுமானாலும் பிரான்ஸுக்கு செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications