கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை
வாடிகன்: கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது தான் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.

தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி
அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பிட்டன் உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தத் தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கத்தோலிக்கர்கள் பயன்படுத்தலாமா?
இருப்பினும், இந்த கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களின் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் ரோமன் கத்தோலிக்கர்கள் இதை எடுத்துக் கொள்வது சரியா என்ற கேள்வி நிலவியது. ஏனென்றால், ரோமன் கத்தோலிக்கர்கள் கருக்கலைப்பை கொடும் குற்றமாகவே கருதுகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்று வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து
போப் பிரான்சிஸின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், "மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் ரோமன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தலாம். கருக்கலைப்பிற்கும் இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் இதை நாம் பயன்படுத்தலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிஷப்களின் குற்றச்சாட்டு
1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு கருக்கலைப்புகளில் இருந்து பெறப்பட்ட திசுக்களிலிருந்து பெறப்பட்ட செல் லைன்களை கொண்டே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க பிஷப்புகள் குற்றஞ்சாட்டினர். அந்த திசுகளின் செல்களே அனைத்து வகையான தடுப்பு மருந்துகளுக்கும் பிரதியெடுக்கப்பட்டன என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

போப் ஆண்டவரின் பதில்
வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், "மற்ற முறைகளைப் பயன்படுத்தி தற்போதுவரை எந்தவொரு பாதுகாப்பான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தற்போதுள்ள கோவிட் -19 தடுப்பு மருந்துகள் பெறுவது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது.

மாற்று முறை தேவை
இருப்பினும், முற்றிலுமாக எந்தவொரு உயிரையும் அழிக்காமல் உருவாக்கும் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் முறையை மருத்து நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். மேலும், ஏழை நாடுகளுக்கும் தேவையான நேரத்தில் தடுப்பு மருந்துகள் கிடைப்பதை அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் பலவீனமானவர்களையும் எளிதில் பாதிக்கப்படுபவர்களையும் காக்க அனைவரும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications