2021ல் எப்போது கொரோனா தடுப்பு மருந்து...சவுமியா சுவாமிநாதன்...அதிர்ச்சி தகவல்!!
ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து 2021ஆம் ஆண்டின் மத்தியில் வரை பெரிய அளவில் விநியோகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் அறிஞர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''2021ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு, அல்லது மூன்றாவது காலாண்டில்தான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மருந்து கிடைக்கும்போதுதான், உலக நாடுகள் தங்களது மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை அளிக்க முடியும்.

பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூன்றாம் கட்டம் நடப்பாண்டு இறுதிக்குள் முடியாது என்பதை வைத்து இதைக் கூறுகிறேன். சிலர் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் ஆய்வு முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர். அப்படியே பார்த்தாலும் இதையடுத்து பெரிய அளவில் பில்லியன் கணக்கில் தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டியது இருக்கிறது. அதுவரை, நாம் நம்பிக்கையுடனும், எதார்த்தத்துடனும் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா தயாரித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆய்வுகள் நடப்பாண்டின் இறுதியில் முடிந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஏற்கனவே பதிவு செய்து தயாரிப்பை துவக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் மருந்தும் இந்தியாவில் வரும் வாரத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே சென்னைக்கு இந்த மருந்து புனேவில் இருந்து வந்து சேர்ந்துள்ளது. புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்த மருந்தை தயாரிக்க ஆக்ஸ்போர்டு உரிமம் அளித்துள்ளது. ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில்தான் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications