”உவ்வே!!! புனுகுப்பூனை காபிதான் உலகிலேயே விலையுயர்ந்ததாம்”
இந்தோனேஷியா: உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்பட்டால் நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை.
வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம், தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து.
காபிக்கொட்டைதான் உணவு:
இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது.
புனுகுப்பூனை கழிவு:
இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம்.
அம்மாடியோவ்! :
அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.
இதில கூடவா ஏமாத்துவாங்க:
அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர்.