Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானுக்கு இது தெரியுமா.. நாம் தமிழர் கட்சி போஸ்டரில் சாணியை கரைச்சி ஊத்திட்டாங்களாமே.. ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வரையப்பட்ட சுவர் விளம்பரத்தில் சாணம் கரைத்து ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர். கடந்த 2010இல் உருவான நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

 Cow Dung was poured on the Naam Thamizhar wall ad

என்எல்சி விவகாரம் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைக் குறிப்பாக இளைஞர்களை அதிகம் கவர்ந்த கட்சிகளில் ஒன்றாக நாம் தமிழர் இருக்கிறது.

சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமானின் அதிரடி சரவெடி பேச்சுகள் இளைஞர்களைக் கவரும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சீமானின் பேச்சுக்கள் டிரெண்டிங் ஆவதும், அவரது ஆதரவாளர்கள் பதிவிடும் கருத்துகளுமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இதுவரை 2016, 2021 என இரண்டு சட்டசபைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் இதுவரை வெல்லவில்லை. அதேநேரம் அதன் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 2016இல் 1 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி கடந்த 2021 தேர்தலில் 6.89%ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி இதுவரை அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரம்: இதற்கிடையே அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாம் தமிழரும் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அக்கட்சி சார்பில் மாநிலம் முழுக்க நடைபெறும் நிகழ்ச்சிகளில் சீமான் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

 Cow Dung was poured on the Naam Thamizhar wall ad

பரபரப்பு: தமிழகத்தில் நாம் தமிழருக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர். கடந்த 2021 தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அங்கே 8 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். அந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடந்த சம்பவம் அங்குள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கே இருந்த நாம் தமிழர் சுவர் விளம்பரத்தில் யாரே சிலர் சாணம் கரைத்து ஊற்றியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது நாம் தமிழர் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. தங்கள் கட்சி சுவர் விளம்பரத்தில் சாணத்தைக் கரைத்த ஊற்றியவர்கள் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+